Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாமன்னிப்பு கேட்ட அஜித்.. கதறி அழுத கேப்டன் விஜயகாந்த்.. !

மன்னிப்பு கேட்ட அஜித்.. கதறி அழுத கேப்டன் விஜயகாந்த்.. !

2023ஆம் ஆண்டு நிறைவேறும் வேளையில் நம் தமிழ்நாட்டின் புரட்சிக் கலைஞர் மற்றும் மக்களால் கேப்டன் என அழைக்கப்பட்ட விஜயகாந்த் இவ்வுலகத்தை விட்டு சென்றார். மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

- Advertisement -

அவரைக் காண லட்ச கணக்கில் மக்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வந்தார்கள். தன்னை சினிமாவில் ஏற்றிய அண்ணன் விஜயகாந்தைக் கண்டு இளைய தளபதி விஜய் கண்ணீர் சிந்தினார். ரஜினி, கமல் உட்பட பல்வேறு சினிமா நட்சத்திரங்களும் தாங்க முடியாத துயரத்தால் அழுதனர்.

கேப்டன் விஜயகாந்த் செய்த நற்பணிகள் எக்கச் சக்கம். சினிமாவில் இளம் இயக்குனர்கள், நடிகர்கள் வளரவும் அவ்வளவு செய்துள்ளார். கடனில் தவித்த நடிகர் சங்கத்தைத் தலைமை தாங்கி மீட்டெடுத்ததும் கேப்டன் விஜயகாந்த் தான். ஒட்டுமொத்த கோலிவுட்டுமே அதனை என்றும் மறக்கமாட்டார்கள்.

- Advertisement -

நடிகர் சங்க கடனை அடைக்க தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரையும் மலேசியா அழைத்துச் சென்றார். அங்கு நடக்கும் நட்சத்திர விழாவில் கட்டாயம் அனைவரையும் பங்கேற்க வேண்டுமென விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். ஆனால் அதில் அஜித் வரவில்லை.

- Advertisement -

விழா நிறைவு பெற்று சென்னை திரும்பிய கேப்டனைக் கண்டு பணத்தை கொடுக்கலாம் என அஜித் சென்றுள்ளார். அப்போது கேப்டன் விஜயகாந்த், “ உன்னோட பணம் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் நினைத்தது விட அதிகமாகவே பணத்தை திரட்டிவிட்டோம். ” என கோபத்துடன் பேசினார்.

அஜித்குமாரின் காரணங்களை அவர் ஏற்க்கவே இல்லை. பிறகு அஜித்குமார், விழாவில் பங்கேற்க இயலாததற்கான உண்மையான காரணத்தை காட்டினார். தனது முதிலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ததால் தான் வர முடியவில்லை என சொன்னார்.

இதனைக் கண்ட கேப்டன் விஜயகாந்த் உடனே அழுதுவிட்டார். அஜித்குமாருக்கு ஏற்பட்ட காயத்தை அவரால் தாங்க முடியவில்லை. பிறகு, அஜித்குமார் அவர்கள் கொடுத்த பணத்தை முழு மனதோடு எடுத்துக் கொண்டார். இதே போல அவரது மறைவுக்கும் அஜித்தால் வர இயலவில்லை.

அஜித் துபாயில் ஷூட்டிங்கில் சிக்கியதால் கேப்டன் மறைவுக்கு போகவில்லை. விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதாவுக்கு போனில் அழைப்பு விடுத்து இரங்கலைத் தெரிவித்தார். சென்னை வந்ததும் வீட்டிற்க்கு வந்து பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

Most Popular