Entertainment

ரஜினிக்கு விக்ரமை வில்லனாக்கும் முயற்சியில் இயக்குனர் ஞானவேல்… கதை கேட்டும் நடிக்க முடியாது எனக் கூறினாரா விக்ரம்… இது மட்டும் நடந்தா… தலைவரே கொல மாஸு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 படத்தை இயக்கும் வாய்ப்பு ஜெய்பீம் படம் புகழ் ஞானவேலுக்கு கிடைத்தது. லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சூர்யாவை வைத்து சம்பவம் செய்த ஞானவேல் சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பை நிச்சயம் வீணடிக்க மாட்டார். ரஜினியை வைத்து வேற லெவலில் சம்பவம் செய்து ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைப்பார் என தலைவர் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

ஜெய்பீமை போன்றே இந்த படத்தையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தான் எடுக்கிறாராம் ஞானவேல். அந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் ரஜினி. அவர் ஒரு இஸ்லாமியராக நடிக்கிறாராம். போலீசார் நடத்தும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் நபராக நடிக்கிறாராம்.

Advertisement

காவல் துறையில் நடக்கும் அத்துமீறல்களை திரையில் காட்டப் போகிறாராம் ஞானவேல். லால் சலாம் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இதனிடையே ரஜினிக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக படக்குழுவினர் விக்ரமின் அணுகியதாகவும், ஆனால் விக்ரம் அதற்கு நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

படக்குழுவினர் கதையை கூறிய பிறகும் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்கு விக்ரமிற்கு விருப்பமில்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. இருப்பினும் கதைக்கு வில்லனாக நடிப்பதற்கு விக்ரம் ஒருவரே சரியாக இருப்பார் என இயக்குனர் ஞானவேல் நம்புகிறாராம்.

Advertisement

இதனால் அவரை நடிக்க வைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தையில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள ரஜினி மற்றும் விக்ரம் ரசிகர்கள், அவர் இந்த படத்தில் நடித்தால் மாஸாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் ரஜினி, விரைவில் ஞானவேல் படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top