Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentசென்னை என்னை கைவிட்டது.. தெலங்கானா தான் காப்பாற்றியது.. சர்ச்சையில் சிக்கிய விஜே ரம்யா.. பொளந்து கட்டும்...

சென்னை என்னை கைவிட்டது.. தெலங்கானா தான் காப்பாற்றியது.. சர்ச்சையில் சிக்கிய விஜே ரம்யா.. பொளந்து கட்டும் ரசிகர்கள்

அண்மை காலங்களில் தொலைக்காட்சி விஜே-க்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு எளிதாக சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வரும் விஜே-க்களின் பட்டியல் மிகப்பெரியது. குறிப்பாக சிவகார்த்திகேயன், டிடி வரிசையில் இணைந்தவர் விஜே ரம்யா.

- Advertisement -

இவர் மாடலிங் துறையில் இருந்து விஜே-வாக மாறியவர். நீண்ட காலமாக விஜய் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் திருமண உறவில் இணைந்தார். ஆனால் சில மாதங்களிலேயே திருமண உறவில் இருந்து விலகிய அவர், மீண்டும் மாடலிங் மற்றும் மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கினார்.

இதன் மூலம் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் ஓகே கண்மணி, சங்கத்தலைவன், மாஸ்டர் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். அதேபோல் ஃபிட்னஸ் தொடர்பாக புத்தகம் ஒன்றை எழுதிய அவர், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் ஃபிட்னஸ் வீடியோக்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் சென்னையில் வெள்ளம் வந்து மக்கள் அனைவரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் தெலங்கானாவுக்கு சென்றுள்ள விஜே ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது முதல் தாய் வீடான தமிழ்நாடு கைவிட்டாலும், இரண்டாவது தாய் வீடான தெலங்கானா காப்பாற்றியதாக கருத்து பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர். என்ன நடந்தாலும் தமிழ்நாட்டிற்கு தான் திரும்பி வர வேண்டும், தமிழ்நாடு தான் உங்களை வளர்த்தது என்று காட்டமாக பதிவிட்டு வருகிறார்கள். புயல் வரும் சூழலில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய ரம்யா, இப்படி கருத்து பதிவிட்டுள்ளது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Most Popular