Wednesday, May 8, 2024
- Advertisement -
HomeEntertainmentநீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி… இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன்… யோகி பாபுவும் இருப்பதால்...

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி… இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன்… யோகி பாபுவும் இருப்பதால் காமெடி சரவெடி ரெடி!

தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான். அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம் படுத்தியுள்ளார்.

- Advertisement -

இவர் ரஜினி, கமல் காலம் தொடங்கி தற்போது உள்ள நிறைய நடிகர்கள் வரை என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் தனியாக தான் படங்களில் கலக்கி வந்தார். பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இவர் 2016ஆம் ஆண்டில் வெளியான “வாய்மை” என்ற படத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கவுண்டமணி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சினிமாவில் களமிறங்கி விட்டார். பழனிச்சாமி வாத்தியார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. இப்படத்தை மதுரை செல்வம் என்பவர் தயாரிக்கிறார். படம் குறித்து அவர் கூறுகையில்,

- Advertisement -

“கவுண்டமணி சாரைத் தேடி நிறைய கதைகள் வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால், கதை பிடிக்காமல் போனதால், எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இந்த நேரத்தில் தான் `பழனிசாமி வாத்தியார்’ கதையைக் கேட்டதும் உடனே நடிக்க சம்மதித்தார்.

- Advertisement -

கவுண்டமணியின் ஜோடியாக சஞ்சனா சிங் நடிக்கிறார். யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், ரைடர் ரவி, டி.சிவா, ஆர்.கே.சுரேஷ், ஜே.எஸ்.கே. சதீஷ் என 11 தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஒயிட் ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.

முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடிக்க சம்மதித்து விட்டார். படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் `கே’ இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

இந்த படத்தின் கதை கவுண்டமணி சாரை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தில் அவர் கழுதை மேய்ப்பவராக வருகிறார். 35 கழுதைகளை படத்தில் பயன்படுத்த உள்ளோம். எங்கள் நிறுவனம் உருவாக்கிய கதையை செல்வ அன்பரசன் என்பவர் இயக்குவதாக இருந்தது. இப்போது அவர் இயக்கவில்லை. அவருக்கு பதிலாக பெரிய இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். இதுகுறித்த அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. ” என்கிறார்.

Most Popular