Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainmentபாகுபலி நாயகனுக்கா இந்த நிலைமை.. வழுக்கை தலையுடன் அமர்ந்திருக்கும் பிரபாஸ்.. உண்மை என்ன?

பாகுபலி நாயகனுக்கா இந்த நிலைமை.. வழுக்கை தலையுடன் அமர்ந்திருக்கும் பிரபாஸ்.. உண்மை என்ன?

பாகுபலி முதல் மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றார் நடிகர் பிரபாஸ். அதிலும் பாகுபலி இரண்டாம் பாகம் வட இந்தியாவில் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடிக்க, வட இந்திய ஹீரோக்களை விடவும் பிரபாஸ் படத்திற்கான வரவேற்பு எகிறியது. இதனால் அடுத்தடுத்து பான் இந்தியா படங்களில் நடிக்க தொடங்கினார் பிரபாஸ்.

- Advertisement -

ஆனால் பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் நடித்த எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சாஹோ படம் ரூ.300 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டினாலும், பெரியளவில் லாபமும் இல்லை. விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து வந்த ராதே ஷ்யாம் திரைப்படம் கொடூரமான படமாக அமைந்தது. பிரபாஸ் சினிமா வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவிற்கு மோசமான பிளாப்பாக மாறியது.

பின்னர் வந்த ஆதி புருஷ் படத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. வட இந்தியாவிலும் பிரபாஸை ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கினார்கள். பான் இந்தியா, பான் இந்தியா என்று பிரபாஸ் சினிமா வாழ்க்கையை கெடுத்துகொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

இதனால் பிரபாஸ் அடுத்ததாக நடித்து வரும் சலார் மற்றும் பிராஜக்ட் கே படத்தையே அதிகமாக நம்பி இருக்கிறார். சலார் படத்தை கேஜிஎஃப் இயக்குநர் இயக்கி வருவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பிரபாஸ் தனது ஃபிட்னஸையும் விட்டுள்ளார். அதேபோல் தலைமுடியும் அதிகமாக கொட்டி வருகிறது. அண்மையில் கூட உடல் பருமனுடன் பிரபாஸ் இருந்த புகைப்படங்கள் வைரலாகின.

- Advertisement -

இந்த நிலையில் சொட்டையான பிரபாஸ் இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனால் பிரபாஸிற்கு என்ன ஆனது என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டது. ஆனால் அந்தப் புகைப்படம் எதிர்தரப்பு ரசிகர்கள் பிரபாஸை கிண்டல் செய்ய போட்டோஷாப் மூலம் செய்த புகைப்படம் என்று தெரிய வந்துள்ளது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Most Popular