Friday, May 10, 2024
- Advertisement -
Homeசினிமாகபடி வீரர் வாழ்க்கையை படமாக்கும் மாரிசெல்வராஜ்..! கடும் பயிற்சியில் துருவ் விக்ரம்

கபடி வீரர் வாழ்க்கையை படமாக்கும் மாரிசெல்வராஜ்..! கடும் பயிற்சியில் துருவ் விக்ரம்

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் திரைப்படம் ரிலீஸ்க்காக கடுமையாக பணியாற்றி வருகிறார். இந்த படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்து மாரி செல்வராஜ் ஏற்கனவே கூறியிருந்தார்.

- Advertisement -

இன்னும் சொல்லப்போனால் துருவ் விக்ரம் வைத்து கபடி வீரர் வாழ்க்கையின் படத்தை எடுக்க அனைத்து பணிகளையும் மாரி செல்வராஜ் எடுத்திருந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தமக்கு கடைசி படம் ஒன்றை செய்ய வேண்டும் என்று கூறியதார்.

- Advertisement -

இந்தப் படத்தை ஒத்தி போட்டு விட்டு மாமன்னன் படத்திற்கு சென்று இருந்தார்.இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாரி செல்வராஜ் மாமன்னன் படம் முடிவடைந்து விட்டதால் தற்போது என்னுடைய அடுத்த படமான துருவிக்கிரம் வைத்து எடுக்க இருக்கிறேன்.

- Advertisement -

இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்குகிறது. எனக்கு எப்போதுமே வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க வேண்டும் என்பது ஆசை. இதனால் தான் கபடி வீரர் மனாதி கணேசன் பற்றி படம் எடுக்க இருக்கிறேன். இதற்காக துருவ் விக்ரம் கடும் பயிற்சியை எடுத்து வருகிறார்.

சொல்லப்போனால் ஒரு கபடி வீரராகவே அவர் மாறி இருக்கிறார். இந்த படத்தை ஒத்தி போட விக்ரம் அண்ணனும் பா ரஞ்சித் அண்ணனும் எனக்கு உதவியாக இருந்தார்கள். அவர்கள் எனக்காக பெரிய மனதோடு காத்திருந்தார்கள். இதற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாமன்னன் திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது.நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். துருவ் விக்ரமுக்கு கபடி தொடர்பான அந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular