Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentதிவ்யா என்ற எனது பெயரை, அபிராமி என ஏன் மாற்றினேன் தெரியுமா… விருமாண்டி அன்னலட்சுமியின் பிளாஷ்பேக்கை...

திவ்யா என்ற எனது பெயரை, அபிராமி என ஏன் மாற்றினேன் தெரியுமா… விருமாண்டி அன்னலட்சுமியின் பிளாஷ்பேக்கை கேட்டு புல்லரித்து போன கமல் விசிறிகள்

நடிகர் திலகம் பிரபு நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், ஆரம்பத்தில் மலையாள படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். முதலில் அங்கு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அபிராமிக்கு, பின்னர் திடமாக கேரக்டர்கள் கிடைக்க ஆரம்பித்தன. தமிழிலும் தனது முதல் படத்தில், திருப்திகரமான நடிப்பை கொடுத்து இருந்தார் அபிராமி.

- Advertisement -

2001-ஆம் ஆண்டில் கோலிவுட்டிற்கு வந்த அபிராமிக்கு, தொடக்கத்தில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அந்த ஆண்டிலேயே சரத்குமாருடன் தோஸ்த், சமுத்திரம், பிரபுவுடன் சார்லி சாப்ளின் படங்களில் நடித்தார். அனுஷ்காவை போன்று உயரம் அதிகமாக இருந்தாலும், இயல்பான நடிப்பில் ஜொலித்ததால் அபிராமிக்கு நாளுக்கு நாள் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

சரத்குமாருடன் மூன்றாவது முறையாக சமஸ்தானத்தில் நடித்த அபிராமி, அடுத்ததாக உச்ச நட்சத்திரமான உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்தார். விருமாண்டி படத்தில் அவர் வாழ்ந்த அன்னலட்சுமி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. திமிலேறி அடங்க மறுக்கும் சொரிமுத்து காளையை வளர்க்கும் கிராமத்து பெண்ணாக நடித்திருந்த அபிராமி, கமலுடன் சேர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் போட்டி போட்டு நடித்தார். காதல் ரசம் சொட்ட சொட்ட கமலுடன் அவர் டூயட் பாடிய காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

- Advertisement -

விருமாண்டிக்கு பிறகு இந்த அன்னலட்சுமி, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென கோலிவுட்டிலிருந்து காணாமல் போனார் நடிகை. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த அவர், மாதவனின் மாறா படத்தில் நடித்தார். இந்த நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர், தான் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர், நான் மட்டுமல்ல எங்கள் குடும்பமே கமல்ஹாசன் ரசிகர்கள்தான். என் அம்மா, பெரியம்மா எல்லாரும் கமல் சார் படத்தை விரும்பி பார்ப்பார்கள். குணா படம் வந்த சமயத்தில், திவ்யா என்று இருந்த எனது பெயரை, அபிராமி என்று மாற்ற சகோதரி கூறினாள். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தொகுப்பாளராக வாய்ப்பு கிடைக்கும்போது எனது பெயர் என்ன என்று கேட்க, யோசிக்காமல் அபிராமி என்று கூறி விட்டேன் என்று பேசியிருக்கிறார். நடிகையின் இந்த வீடியோவிற்கு கமல்ஹாசன் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

Most Popular