Tuesday, May 7, 2024
- Advertisement -
HomeEntertainmentகார்த்திக்கு கதை கூறிய ஜெயம் ரவி… விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கும் அருள்மொழிவர்மன்… எதிர்பாராத தகவலால்...

கார்த்திக்கு கதை கூறிய ஜெயம் ரவி… விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கும் அருள்மொழிவர்மன்… எதிர்பாராத தகவலால் எக்கச்சக்க எதிர் பார்ப்புடன் ரசிகர்கள்!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளங்கள் நிறைந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றியானதை தொடர்ந்து அவரின் மார்கெட் உயர்ந்து உள்ளது. படத்தின் ரிலீஸ்க்கு முன்பே 70 கோடி ரூபாய் வரை ஜெயம் ரவி படத்திற்கு இப்போது பிஸினஸ் நடைபெற்று இருக்கிறதாம். இதைத்தொடர்ந்து தனது சம்பளத்தை அவர் உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலே 25 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இனிவரும் படங்களிலும் இன்னும் சம்பளம் உயரும் எனத் தெரிகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த அகிலன் படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் மற்றும் சைரன் திரைப்படங்கள் இந்த வருடமே வெளியாக உள்ளதாக தெரிகிறது. இதில் சைரன் படத்திற்காக அவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வருகிறார்.

தற்போது சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் எம். ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இந்த படம் ரூ. 100 கோடி பொருட் செலவில் உருவாக இருக்கிறது. இதையடுத்து அவர் அண்ணனும் இயக்குநருமான மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் பற்றி ஜெயம் ரவி கூறியதாவது, பொன்னியின் செல்வன் 2′ ம் பாகத்துக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. என் நடிப்புக்கும் பாராட்டுகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அடுத்தும் இது போன்ற ‘மல்டி ஸ்டார்’ படங்களில் நடிக்க வேண்டுமெனில் அந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது முக்கியம். மணிரத்னம் போன்ற இயக்குநர் என்றால் அது சாத்தியமாக இருக்கும்.

- Advertisement -

நான் இயக்குநர் மணிரத்னத்திடம் அவ்வப்போது ‘ஒன்லைனர்’ சொல்வேன். அதைக் கேட்ட அவர், ‘நீ எழுதலாம்’ என்றார். அவர் சொன்ன பிறகு என் மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. நடிகர் கார்த்தியிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறேன். நான் நடித்துள்ள ‘இறைவன்’ படம் முடிந்துவிட்டது. இப்போது ‘சைரன்’ படத்தில் நடித்து வருகிறேன். அதற்காகத்தான் இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக். அதன் திரைக்களம் வித்தியாசமாக இருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

Most Popular