Friday, May 10, 2024
- Advertisement -
Homeசினிமாஜிகர்தண்டா 2 கதை என்ன? எப்படி இருக்கும்? கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

ஜிகர்தண்டா 2 கதை என்ன? எப்படி இருக்கும்? கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மிக அற்புதமான திரைப்படங்களில் ஒன்று ஜிகர்தண்டா. தேசிய விருது வாங்கிய இந்த திரைப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் எடுத்து வருகிறார்.

- Advertisement -

இதில் எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஜிகர்தண்டா 2 படத்தின் கதையை நான் எழுதும்போதே மனதில் எஸ் ஜே சூர்யாவை வைத்து தான் எழுதினேன்.

- Advertisement -

ஆனால் அவரிடம் கேட்காமலே இந்த படத்தை நான் எழுதி விட்டேன். கலைக்கும் நிழல் உலக தாதாக்கும் இடையே நடைபெறும் மோதல் தான். ஜிகர்தண்டா டு முதல் படத்தில் இருந்தது போலவே இது வித்தியாசமான கதை கோணத்தில் இருக்கும்.

இந்தப் படத்திற்காக எங்களுடைய படக்குழுவினர் பெரிய அளவில் உழைத்திருக்கிறார்கள் நிச்சயமாக இது ரசிகர்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். எஸ் ஜே சூர்யா என்னுடைய நல்ல நண்பராகவே மாறிவிட்டார். இறைவி திரைப்படத்திற்கு பிறகு நாங்கள் ஒன்றாக இணைந்தோம்.

ஆனால் அவ்வப்போது நானும் அவரும் தொடர்பிலே இருந்தோம். சினிமாவைப் பற்றி அதிகம் விவாதிப்போம். இதனால் எஸ் ஜே சூர்யா திறமை என்ன என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

அவர் ஒரு இயக்குனராக இருப்பதால் படத்தளத்தில், எனக்கும் உதவியாக இருக்கும் பொம்மை படத்தில் அவர் ஒரு காட்சி நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு நிமிடம் அது ஓடும் அதில் அவர் ஒரே சாட்டில் அந்த காட்சியை நடித்த கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

Most Popular