Friday, May 10, 2024
- Advertisement -
Homeசினிமாவடிவேலுக்கு மாரி செல்வராஜ் போட்ட கட்டளை! தடை போட்டு வேலை வாங்கினாராம்!

வடிவேலுக்கு மாரி செல்வராஜ் போட்ட கட்டளை! தடை போட்டு வேலை வாங்கினாராம்!

ஜூன் மாதத்தில் தமிழக சினிமாவில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவர உள்ள மாமன்னன் திரைப்படம் தான். பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற பெரிய ஹிட் படங்களை கொடுத்துள்ள மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் பகத் பாசில் வடிவேலு ஆகியோரை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கு காரணம் வடிவேலு இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். வடிவேல் என்றாலே நகைச்சுவை தான் வடிவேலுவை நாம் நகைச்சுவை நடிகராக பார்த்திருப்போம். ஆனால் முதல் முறையாக வடிவேலு வில்லனாக நடித்திருக்கிறார் .

- Advertisement -

இந்த நிலையில் வடிவேலுவை இயக்கியது குறித்து மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார். அதில் வடிவேலுவின் நகைச்சுவைக்காக நான் அவரை வெகுவாக ரசித்திருக்கிறேன். ஆனால் நான் எதை ரசித்தேனோ அதனை செய்ய இந்த படத்தின் நான் அனுமதிக்கவில்லை.

- Advertisement -

இந்தப் படத்தில் வடிவேலும் சீரியசான கேரக்டரில் நடித்திருக்கிறார்.நாம் ஒரு புதிய பரிணாமத்தில் வடிவேலுவை பார்ப்போம் .ஆனால் படத்தில் தான் சீரியஸாக இருந்தால் ஷூட்டிங்கில் எப்போதும் போல அனைவரையும் கலகலவென வடிவேலு வைத்திருப்பார்.

ஏதேனும் காமெடி செய்து கொண்டே இருப்பார்.இதனால் எப்போதுமே படத்தளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம். வடிவேலு அடிக்கும் காமெடிக்கு பகத் பாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரெல்லாம் பல்டி அடித்து சிரிப்பார்கள்.

அந்த அளவிற்கு ஏதேனும் சொல்லிக் கொண்டே இருப்பார் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு கடைசி திரைப்படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இது பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது.

Most Popular