Friday, May 10, 2024
- Advertisement -
Homeசினிமாசென்னையில் கொடைக்கானல் செட் போட்டு ஷூட்டிங்! சூர்யா 43 எப்போது முடியும்

சென்னையில் கொடைக்கானல் செட் போட்டு ஷூட்டிங்! சூர்யா 43 எப்போது முடியும்

நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகிறது.இதில் சூர்யா மிரட்டும் லுக்கில் இருந்தாலும் அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையும் பெற்றது. இந்த நிலையில் கங்குவா படத்தின் முதல் படப்பிடிப்பு செடியூல் கொடைக்கானலில் நடைபெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் கொடைக்கானலில் சில காட்சிகளை படக்குழு எடுக்காமல் விட்டு விட்டதாம். ஆனால் தற்போது அந்த இடத்திற்கு சென்று ஷூட்டிங் எடுக்க முடியாத காரணத்தினால் சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் கொடைக்கானல் போல் செட்டு போட்டு சில காட்சிகளை மட்டும் படக்குழு எடுக்க உள்ளதாம்.

இந்த காட்சிகளில் நடிகர் சூர்யா மற்றும் திஷா பட்டாணி ஆகியோர் நடிக்க உள்ளார்களாம்.பத்து நாட்கள் வரை ஷூட்டிங் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜமுந்திரி மற்றும் ஹைதராபாத்தில் கங்குவா திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளது.

- Advertisement -

அங்கு தொடர்ந்து முக்கிய காட்சிகளை எடுக்க உள்ளது. இதில் சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.அது முடிந்தவுடன் வரும் அக்டோபர் மாதம் எல்லாம் கங்குவா படத்தின் ஷூட்டிங் முடிந்து விடுமாம்.

- Advertisement -

இதனால் சூர்யா ஒரு மாதம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் சூர்யா 43 திரைப்படத்தில் நடிக்க போய்விடுவார். கங்குவா சூட்டிங் முடிவடைந்த பிறகு அதன் கிராப்ட் காட்சிகள் மேம்படும் பணி தொடர்ந்து நடைபெறும் சில காட்சிகளில் குறை இருப்பதாகவும் அதற்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க பண்டைய கால கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் தான் பழைய காலத்தில் வரும் என்றும் மற்றபடி ஏழாம் அறிவு படம் போல் நிகழ்காலத்தில் நடைபெறும் கதையாக தான் இருக்கும் என்று ஏற்கனவே படத்த தரப்பு தெரிவித்திருந்தது.

Most Popular