Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainmentஎன்னாது தனிஒருவன் படம் பிரபாஸ்-க்கு எழுதுனதா.. கதையை கேட்டுட்டு என்ன சொல்லிருக்காரு பாருங்க.. மோகன் ராஜா...

என்னாது தனிஒருவன் படம் பிரபாஸ்-க்கு எழுதுனதா.. கதையை கேட்டுட்டு என்ன சொல்லிருக்காரு பாருங்க.. மோகன் ராஜா பேட்டி

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான தனிஒருவன் திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகமுக்கியப் படங்களுள் ஒன்றாகும். அத்தனை ஆண்டுகளாக ஜெயம், உனக்கும் எனக்கும், தில்லாலங்கடி, வேலாயுதம் என்று ரீமேக் படங்களை மட்டுமே மோகன் ராஜா இயக்கி வந்தார். இதன்பின் முதல்முறையாக தனிஒருவன் படத்தை சொந்தமாக எழுதி இயக்கினார்.

- Advertisement -

திரையரங்குகளில் பெரும் ஹிட்டடித்த திரைப்படம் அரவிந்த் சாமிக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது. இதன் மூலம் ஜெயம் ரவி முன்னணி நாயகர்களில் ஒருவராக மாறியதோடு, பெரிய படங்களை செய்ய தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் மோகன் ராஜாவும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.

இந்த நிலையில் தனிஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், மோகன் ராஜா அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிஒருவன் கதை முதல்முதலாக பிரபாஸ்-க்காக உருவாக்கப்பட்டதாக மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Thani Oruvan 2

தனிஒருவன் படத்தின் கதையை மோகன் ராஜா பிரபாஸிடம் கூறிய போது, நான் இப்போது ரொமாண்டிக் காமெடி படங்களை நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் சீரியஸான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்காது என்று நடிக்க மறுத்துள்ளார். அந்த நேரத்தில் வேலாயுதம் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்ததால், அந்தக் கதையை அப்படியே விட்டு வேலாயுதம் படத்தை இயக்கியுள்ளார்.

- Advertisement -

அதன்பின் தனிஒருவன் கதையை தனது தம்பி ஜெயம் ரவிக்காக உருவாக்கி, இயக்கியுள்ளார். அது அதிரி புதிரி ஹிட்டடித்ததோடு மட்டுமல்லாமல், தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் துருவா என்ற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது. அதுவும் பெரிய ஹிட்டான நிலையில், மோகன் ராஜாவை அழைத்து சிரஞ்சீவி ஒரு படம் நடிக்கவும் ஒப்பந்தம் செய்தார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular