Friday, April 19, 2024
- Advertisement -
HomeEntertainmentடாடா இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம்… பச்சைக்கொடி காட்டிய லைகா நிறுவனம்… விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!

டாடா இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம்… பச்சைக்கொடி காட்டிய லைகா நிறுவனம்… விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றவர் கவின். முன்னதாக சரவணன் மீனாட்சி தொடர் மூலமும் கவனத்தை பெற்றார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியானது டாடா படம். படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்தார் அபர்ணா தாஸ். டாடா படத்தை கணேஷ் கே பாபு இயக்கினார்.

- Advertisement -

ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தளங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. டாடா படம் ரிலீசின் போதே அவர், தனது அடுத்தப் படத்தில் லைகா நிறுவனத்துடன் கமிட்டாகினார். தனது முதல் படத்தின் ரிலீசின்போதே அவர் பிரபல நிறுவனத்துடன் கைக்கோர்த்தார்.

இதுகுறித்து லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியது. கணேஷ் கே பாபுவிற்கு ஒப்பந்தத்தை கொடுக்கும்படியான புகைப்படத்தையும் வெளியிட்டது. இந்த நிலையில் புதிய தகவலாக, லைகா நிறுவனம் உடன் கணேஷ் கே பாபு இணையும் படத்தில் நாயகனாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

தற்போது மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க இருக்கும் துருவ் விக்ரம், அதற்காக திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளார். படத்தில் அவர் கபடி வீரராக நடித்திருப்பதால், திருநெல்வேலியில் பயிற்சி பெற்று வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இதற்கு அடுத்ததாக அவர் டாடா இயக்குனர் கணேஷ் கே பாபுவுடன் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Most Popular